தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை கைவிடக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

DIN

சீர்காழி: கர்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கைவிடக் கோரி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரபள்ளி கிராமத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விவசாயிகள் வயலில் இறங்கி கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்று கண்டன குரல் எழுப்பி கோஷம் போட்டனர். விவசாயிகள் வைத்திலிங்கம், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பனங்குடி கிராமத்தில் காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலும , புளியந்துறை கிராமத்தில் வெங்கடேசன் தலைமையிலும், மாதானம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையிலும், ஆரபள்ளம் கிராமத்தில் விவசாய சங்க பொருளாளர் பாஸ்கரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT