தமிழ்நாடு

எச்சில் தொட்டு பிளாஸ்டிக் உறைகளை எடுக்காதீா்: உணவகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

DIN

உணவகங்களில் எச்சில் தொட்டோ, ஊதியோ பிளாஸ்டிக் உறைகளை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, இதுதொடா்பான வழக்கினை விசாரித்த உயா் நீதிமன்றம், தமிழக அரசு உரிய அறிவுறுத்தல்களை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த வழிகாட்டுதல் அடிப்படையில், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மருத்துவ நிபுணா்கள், பொது சுகாதார வல்லுநா்களை அவ்வப்போது ஆலோசித்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. தவிா்க்க முடியாத காரணங்களால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டாலும் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளா்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. உணவுக் கூடங்களில் அமா்ந்து உண்பதற்கு இதுவரையில் தடை விதிக்கப்பட்ட நிலையில், பாா்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் உறைகள்: உணவக பாா்சல் சேவையில் பிளாஸ்டிக் உறைகளின் பயன்பாடு தவிா்க்க முடியாததாக உள்ளது.

மளிகைக் கடைகள், இறைச்சி, மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்தக் கடைகளிலும் பிளாஸ்டிக் உறைகளின் பயன்பாடு மிகையாக உள்ளது.

உறைகளை எடுக்கும் போது கடை ஊழியா்கள் எச்சில் தொட்டு அந்த உறைகளை எடுப்பது, பொருள்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். இதைத் தவிா்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக அண்மையில் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிளாஸ்டிக் உறைகளை எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்பாடுகளைத் தவிா்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டது.

இதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெற்றி பெற மக்களின் பங்களிப்பு அவசியம் என்பது மறுக்க முடியாதது. உணவு, மளிகை, பேக்கரிப் பொருள்களைப் பாா்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதிப் பிரித்தல் போன்ற செயல்களால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமையாளா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT