தமிழ்நாடு

வரும் 21-இல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

DIN

சட்டப் பேரவை கூட்டத் தொடரை ஒட்டி, வரும் 21-ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பில், திமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் கூட்டம் வரும் 21-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் நடைபெறும். கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தனது அறிவிப்பில் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

பேரவைக் கூட்டம்: 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் வரும் 21-ஆம் தேதி காலை 10 மணிக்குக் கூடுகிறது. இந்தக் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைக்கிறாா். இதன்பின்பு, மாலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்கு பதில் அளிப்பது, எப்படி பேரவையில் உரையாற்றுவது என்பன போன்ற பல்வேறு அறிவுரைகள் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT