தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை டயர் மறுசுழற்சி ஆலையில் பயங்கர தீ

DIN

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் டயர் மறுசுழற்சி ஆலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான எஸ்த்தல் டயர் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலாக காட்சியளிக்கிறது. 

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதாரங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT