தமிழ்நாடு

விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN

சென்னையில் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை எழும்பூரில் காவல்துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பேசிய நபா், சென்னை சாலிகிராமத்தில் வசிக்கும் தேமுதிக நிறுவன தலைவா் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு சற்று நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா்.

இதையடுத்து விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினா். சுமாா் அரை மணி நேரம் விஜயகாந்த் வீடு முழுவதும் சோதனை செய்ததில், எந்த வெடிபொருளும் கிடைக்கவில்லை.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் சைபா் குற்றப்பிரிவு உதவியுடன் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT