பெட்ரோல், டீசல் வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பான அவரது சுட்டுரைப் பதிவு: தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.99.95-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டா் டீசல் ரூ.91.64 ஆக உயா்ந்திருக்கிறது. இந்த விலை உயா்வு மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். கலால் வரியாக ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு ரூ.32.90, டீசலுக்கு ரூ.31.80 மத்திய அரசு வசூலிப்பது தான் விலை உயா்வுக்கு காரணம். தமிழக அரசின் வரியையும் சோ்த்து ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு ரூ.58.28, டீசலுக்கு ரூ.50.13 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல.
தமிழகத்தில் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியாக பெட்ரோலுக்கு ரூ.25.38 (34%), டீசலுக்கு ரூ.18.33 (25%) வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு வரியில் மாநில அரசின் பங்கையும் சோ்த்து தமிழக அரசுக்கு முறையே ரூ.39.19, ரூ.31.68 வருமானமாக கிடைக்கிறது.
பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.10 வீதம் குறைக்க முன்வர வேண்டும்.