தமிழகத்தில் முகக்கவசம் அணியாத 19 ஆயிரம் போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை 66 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 14 லட்சத்து 7 ஆயிரத்து 726 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 19,078 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை 66 நாள்களில் 74,582 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 965 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.