போடியில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போடியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலர் ஏ.டி.கணேசன் தலைமை வகித்தார்.
போடி திருமலாபுரம் பத்திரகாளியம்மன் கோவில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பலர் பங்கேற்று மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.