தமிழ்நாடு

திருப்புவனம் அருகே வேன் மோதி பைக்கில் வந்த இரு இளைஞர்கள் சாவு

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வேன் மோதி பைக்கில் வந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் பிரவீன் குமார்(19), அருகே உள்ள கட்டமன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் மகன் சதீஷ்குமார் (20) இருவரும் மதுரையில் வேலை பார்த்து வந்தனர்.

இரவு வேலை முடிந்து இருவரும் ஒரே பைக்கில் தங்களது கிராமங்களுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். 

திருப்புவனம் அருகே புலியூர்- பொட்டபாளையம் சாலையில் விபத்து ஏற்படுத்திய வேன்.

புலியூர் -பொட்டபாளையம் சாலையில் வந்துகொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வேன் பைக் மீது மோதியது. இதில், சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரவீன்குமார் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

 இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT