தமிழகத்தில் புதிதாக 15,108 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 15,108 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 23,39,705 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 27,463 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 21,48,352 பேர் குணமடைந்துள்ளனர்.
374 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 29,280 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தேதியில் 1,62,073 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக கோவையில் 1,982 பேருக்கும், ஈரோட்டில் 1,353 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 989 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.