பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் பொதுமுடக்கம்அமலில் இருந்து வருகிறது. தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | தேர்தல் 2024: மோடிக்கு எதிராக நிறுத்தப்படுகிறாரா மம்தா?
மேலும், தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜூலை 31ஆம் தேதியுடம் முடிவடையும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்று வரும் ஆலோசனயில் தலைமைச் செயலர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.