தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு நன்றி: கனிமொழி எம்.பி.

DIN

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்கத் தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு நன்றி என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், கால நீட்டிப்பு கேட்டு வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி கால அவகாசம் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசின் முடிவுக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. 

தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ்நாடு அரசின் முடிவிற்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT