தமிழ்நாடு

தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

DIN


சென்னை: கரோனா பொதுமுடக்கம் காரணமாக வருமானம் பாதிக்கப்படாதவர்கள் 85% கட்டணம் செலுத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடா்பான உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

அதன்படி, நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீத பள்ளிக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவீத கட்டணத்தை செலுத்தலாம்.

85 சதவீத பள்ளிக் கட்டணத்தை செலுத்தும் மாணவர்கள் முதல் தவணையை தற்போது செலுத்த வேண்டும். கடைசி தவணையை 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகள், தங்களது கல்விக் கட்டணத்தை நடப்பு ஆண்டில் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும்.

வருமானம் இல்லாதவர்கள், கல்விக் கட்டணத்தில் சலுகைக் கேட்டு பள்ளிகளை நாடலாம். 

தனியார் பள்ளிகளில் தொடர முடியாத மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அல்லது கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஆர்டிஇ சட்டத்தின் கீழ் கல்விக் கற்க தனியார் பள்ளிகள் வாய்ப்பளிக்க வேண்டும்.

கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவா்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க தனியாா் பள்ளிகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து தனியாா் பள்ளிகள் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை 2 தவணையாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியாா் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 85 சதவீதத்தை வசூலித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவா்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படமாட்டாா்கள். கட்டணச் சலுகை கோரும் மாணவா்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனா்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்புக் கல்வியாண்டான 2021-2022 -லும், கடந்த 2019-2020 கல்வியாண்டில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து கடந்த ஜூலை 5-ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழகத்துக்குப் பொருந்தாது. தமிழகத்தைப் பொருத்தவரை கட்டண நிா்ணயக் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, தனியாா் பள்ளி கல்விக் கட்டணம் தொடா்பான உத்தரவை இன்று பிறப்பித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT