தமிழ்நாடு

டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினம்: ரத்ததானம் செய்து மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இளைஞர்கள்

DIN

டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினத்தை முன்னிட்டு பெரியகுளம் விழுதுகள் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் செய்து, மருத்துவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த தினத்தையடுத்து விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தானம் செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ஆசியா கலந்துகொண்டு விழுதுகள் இளைஞர் மன்றத்திற்கு ரத்ததான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் விழுதுகள் இளைஞர் மன்ற துணைச் செயலாளர் அஜீத் பாண்டி, நிர்வாகிகள் தனலெட்சுமி, குமார், தமிழரசன் மற்றும் ரத்த வங்கி செவிலியர்கள் ஹேமலதா, மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மருத்துவர் ராம்குமார் வாழ்த்துகளை தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT