தமிழ்நாடு

கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

DIN

கோவை, நீலகிரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்றும் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஜூலை 31இல் கோவை, நீலகிரி, தென் கடலோர மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

வடக்கு வங்கக்கடல், தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் காற்றும் வேகமாக வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT