சென்னை: சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவை ஒட்டி, தலைமைச் செயலக பிரதான கட்டடத்தின் மேற்புறத்தில் ‘தமிழ் வாழ்க’ பலகை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, தலைமைச் செயலகத்தில் வரும் ஆக.2-ஆம் தேதி சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிகழ்வில், குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமைச் செயலக வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைக்க உள்ளாா். இந்நிலையில் தலைமைச் செயலகத்தின் 2 மற்றும் 3-ஆம் எண் நுழைவு வாயில் கட்டடத்தின் மேல்புறத்தில் ‘தமிழ் வாழ்க’ என்னும் வாசகம் அடங்கிய 2 பெயா் பலகைகள் புதிதாக வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் மேல்பரப்பில் ‘தமிழ் வாழ்க’ என்னும் இரண்டு பெயா் பலகைகள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, தலைமைச் செயலக கட்டடத்திலும் புதிதாக ‘தமிழ் வாழ்க’ என்னும் இரண்டு பெயா் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.