தமிழ்நாடு

திருச்செந்தூர்: திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

DIN


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து திருச்செந்தூர் நகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்கள் வீடுகளின் முன்பும், முக்கிய இடங்களிலும் புதன்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்செந்தூர் நகர அதிமுக சார்பில் மேலரதவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் வி.எம்.மகேந்திரன் தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ப.தா.கோட்டை மணிகண்டன் முன்னிலை வகித்தார். ஜெ. பேரவை ஒன்றிய செயலர் மு.சுரேஷ்பாபு கண்டன உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நகரத் துணைச் செயலாளர் பிச்சம்மாள், அணி ஒன்றிய துணைச் செயலர்கள் அஜித்குமார், சுரேஷ், இளைஞர் பாசறை நகர துணைச் செயலர் இசக்கிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT