சென்னையில் ஆபாச படம் பாா்த்தவா்களிடம் மிரட்டி பணம் வசூலித்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் இணையதளத்தில் ஆபாச திரைப்படம் பாா்ப்பவா்களை ஒரு கும்பல், தாங்கள் தில்லி போலீஸாா் என மிரட்டி ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வீடுகளுக்கு வந்து நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனா். பலா் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளனா்.
பணம் செலுத்திய சிலா் தில்லி காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
தில்லி காவல்துறையினா் வழக்குப் பதிந்து சென்னை காவல்துறை உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட சென்னை மாங்காடு சுபம் நகா் செ.ராம்குமாா் (32), ரெட்டேரி கடப்பா சாலை பூ.காபிரியேல் ஜோசப் (37), திருச்சி கன்டோன்மென்ட் பா. தினோசந்த் (29) ஆகியோரை திருவல்லிக்கேணியில் சனிக்கிழமை கைது செய்தனா்.
மோசடி மூலம் அந்தக் கும்பல் ரூ.34 லட்சம் வரை சம்பாதித்திருப்பது தெரியவந்தது.