தமிழ்நாடு

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மருத்துவமனையில் அனுமதி

DIN

உடல்நிலை குறைவு காரணமாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, அருமனை கிறிஸ்தவ இயக்கம், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கடந்த 18 ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் அருமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனநாயக கிறிஸ்துவ பேரவை அமைப்பின் ஆலோசகரான, கிறிஸ்துவ மத அருள்தந்தை ஜாா்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அந்த விடியோ இணையதளங்களில் வைரலானது.  

இதையடுத்து சாதி, மத மோதலைத் தூண்டும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியை ஜார்ஜ் பொன்னையா கைது செய்ய வேண்டும் என பாஜக, இந்து இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் புகார்கள் எழுப்பினர். இதையடுத்து ஜார்ஜ் பொன்னையா மீது சட்ட விரோதமாக கூடுதல், சாதி, மதம் மற்றும் இரு தரப்பினரிடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகள் மீது அவதூறு பரப்புதல் என 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

இதனிடையே, இந்து கடவுள்கள், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாகவும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத அருள்தந்தை ஜாா்ஜ் பொன்னையாவை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் வைத்து போலீஸார் இன்று கைது செய்தனர். இதையடுத்து குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT