தமிழ்நாடு

அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா?: ஜெயக்குமார் விளக்கம்

7th Jul 2021 01:21 PM

ADVERTISEMENT


உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக-பாஜக கூட்டணி சர்ச்சை குறித்து விளக்கமளித்த அவர், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.டி.ராகவன் இடையேயான 
பிரச்னை குறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும். 

படிக்க: அதிமுகவால் தான் பாஜகவுக்கு தோல்வி: சி.வி.சண்முகத்துக்கு, ராகவன் பதில்

உள்கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். அதிகாரப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை. இதனால் இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

ADVERTISEMENT

படிக்க: அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்: ஓபிஎஸ் அறிக்கை

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவை தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT