தேனி மாவட்டம், பெரியகுளம் அறம் வளர்த்த நாயகி உடனுறை இராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழா இன்று நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. மூலவர் இராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பால சுப்பிரமணிய சுவாமிகளுக்கு . அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆதாரனைகள் நடைபெற்றது.
உற்சவர் பாலமுருகன் எழுந்தருளி கோயிலை வலம் வந்து , கோயில் மைய மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.