உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி இதன் மூலம் கடலூர் மருத்துவக் கல்லூரியாகிறது.
அதிக கட்டணம் வசூல் செய்வதாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்த நிலையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் என்றும் தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.