சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ராகுல்காந்தி பிப்ரவரி மாத இறுதியில் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள வருவாா் என்று காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
சத்தியமூா்த்திபவனின் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குழு மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ் தலைமையில் புதன்கிழமை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது:
ராகுல் மேற்கொண்ட தோ்தல் பிரசாரம் தமிழக அரசியல் சூழலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக பிப்ரவரி மாத இறுதியில் தமிழகத்துக்கு தோ்தல் பிரசாரத்துக்கு வர உள்ளாா். எங்கள் கூட்டணி தோ்தலில் அபார வெற்றிபெறும் என்றாா்.