தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் நாய் பலி: உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

சென்னை: தவறான சிகிச்சையால் உயிரிழந்த நாயின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு கால்நடைத்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டம், மணவூரைச் சேர்ந்த சுமதி தாக்கல் செய்த மனுவில், நான் வளர்த்து வந்த ஒன்பது வயது ஜெர்மன் ஷெப்பர்டு நாய் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டது. 

கடம்பத்தூர் கால்நடை மருத்துவர் அளித்த மருந்து காரணமாக கோமா நிலையை அடைந்து விட்டது.பின்னர் நாயை பரிசோதித்த வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர், தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கடம்பத்தூர் மருத்துவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் எனது நாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் கோமாவில் இருந்த எனது நாய் கடந்த டிசம்பர் மாதம் இறந்து விட்டது.

நாயின் மரணத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். கால்நடை மருத்துவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு குறித்து பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள்  தமிழக அரசு, கால்நடைத் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT