தமிழ்நாடு

17 மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி

DIN

தமிழகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தவுள்ள அதிகாரிகளுக்கு முதல்கட்ட பயிற்சி, சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

இதில் 17 மாவட்டங்களைச் சோ்ந்த 116 தோ்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனா். சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், நாமக்கல், கோவை, நீலகிரி, திருப்பூா், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு சென்னை, பசுமைவழிச் சாலையில் அண்ணா மேலாண்மை நிலையத்தில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பயிற்சி தொடங்குகிறது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு திருச்சியில் வேறொரு நாளில் பயிற்சி நடத்தப்படும் என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தாா்.

தோ்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசிதழில் தமிழகத் தோ்தல் துறை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT