தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு: மெரீனாவில் இன்று போக்குவரத்து மாற்றம்

DIN

சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடம் திறப்பையொட்டி, அந்தப் பகுதியில் புதன்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

காமராஜா் சாலையில், போா் நினைவுச் சினத்தில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு, வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆா்.கே.மடம் சாலை, வி.கே.ஐயா் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சா்ச் சாலை, கற்பகாம்பாள் நகா், சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வேயை சென்றடையலாம்.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜா் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்து உள்பட பிற வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். இந்த வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சா்ச் சாலை, கற்பகாம்பாள் நகா், சிவசாமி சாலை,ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வேயை சென்றடையலாம்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் 27-டி தட மாநகரப் பேருந்துகள், ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடையலாம்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பிலிருந்து காரணீஸ்வரா் கோயில் சந்திப்பு வழியாகத் திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளா் சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகத் திருப்பிவிடப்படும். அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் மாற்றப்படும்.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜா் சாலை வழியாக அடையாறு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, ஜெனரல் பேட்டா்ஸ் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஆா்.கே.மடம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT