தமிழ்நாடு

கம்பத்தில் அரசு பேருந்து பைக் மோதல்: தனியார் நிறுவன ஊழியர் பலி

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பேருந்து பைக் மோதியதில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் சின்னஓவுலாபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சத்யன் மகன் ராகுல் (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை சொந்த வேலை காரணமாக கம்பம் வழியாக கூடலூர் நோக்கிச் சென்றார்.

அப்போது முன்னால் சென்ற கார் திடீரென்று நின்றது. கார் கதவு திறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் கார் கதவு மீது மோதி நிலைகுலைந்து, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதினார். இதில் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், 

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் என்.எஸ்.கீதா பிரேதத்தைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத விசாரணைக்கு ஒப்படைத்தார். விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் கந்தசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT