தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் இருசக்கர வாகனப் பேரணி

DIN

புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சிபுரத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு காஞ்சிபுரம் கிளை சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முன்பிருந்து தொடங்கிய பேரணி திருக்கச்சிநம்பிகள் தெரு வழியாக வந்து ரங்கசாமி குளம் பகுதியில் நிறைவு பெற்றது.

பேரணிக்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சாரங்கன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாயிகள் பிரிவு மாவட்டச் செயலாளர் மூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் நகர் செயலாளர் ஜெ.கமலநாதன்,பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் அமைப்பாளர் டெல்லிபாய் ஆகியோர் உட்பட பலரும் பேரணியில் கலந்து கொண்டனர். 

பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேசியக்கொடி மற்றும் கட்சிக் கொடியுடன் கலந்து கொண்டனர்.பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் அதிகாரம்,மதிமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்..வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT