தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 72-வது  குடியரசு நாள் விழா

DIN

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நாட்டின் 72-வது ஆண்டு குடியரசு நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில்  பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா தலைமையில் நடைபெற்ற இந்தக் குடியரசு நாள் விழாவிற்கு பேரூராட்சி இளநிலை உதவியாளர் நரேந்திரன் பதிவறை எழுத்தர் ரவி வரித்தண்டலர் கருணாநிதி, குணசேகரன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், மேட்டுத் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் ப.யமுனா தேசியக் கொடியேற்றினார்.

தொடர்ந்து மாணவர்கள் கொடி வணக்க பாடலை பாடியதும், அனைவரும் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர். பின்னர் செயல் அலுவலர் ப.யமுனா அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி குடியரசு நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT