அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி செம்பியநல்லூர் வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (23), பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது நண்பர் நந்தகுமார் (23). இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் அவிநாசி அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வெள்ளியம்பாளையம் அருகே சென்றபோது போது எதிரே வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த நந்தகுமார் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.