தமிழ்நாடு

அவிநாசியில் இருசக்கரவாகனம் - கார் மோதல்: இளைஞர் பலி

DIN

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி செம்பியநல்லூர் வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (23), பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது நண்பர் நந்தகுமார் (23). இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் அவிநாசி அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வெள்ளியம்பாளையம் அருகே சென்றபோது போது எதிரே வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த நந்தகுமார் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT