தமிழ்நாடு

தேனி பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு விழா துவங்கியது

DIN



உத்தமபாளையம்: தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு விழா ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் 600 காளைகள் , 350 மாடுபிடி வீரர்களுடன் கோலாகலமாக தொடங்கியது.

பல்லவராயன் பட்டி அருள்மிகு ஏழைகாத்த அம்மன் ஸ்ரீ வல்லடிகாரர் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது.

முதல் காளையாக ஊர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த 600 காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படுகிறது. மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்கி பரிசுகளைப் பெற்று செல்கின்றனர்.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT