தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று (ஜனவரி 24) தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது:
இன்று பெண் குழந்தைகள் தினம். பெண் குழந்தைகளை வெறுக்க வேண்டாம், அவர்களை விரும்ப கற்றுக்கொள்வோம், படிக்க வைப்போம், அவர்களின் மனநலம் பாதுகாத்து மனிதநேயம் காப்போம், அவர்களின் உடல்நலம் காத்து உலக நலம் காப்போம், ஆராதிக்கக் கற்றுக்கொள்வோம், பெண் குழந்தைகளின் வளச்சியில் தளர்ச்சியில்லாமல் உதவுவோம், மகிழ்ச்சியுடன் பெண்களை, பெண் குழந்தைகளை கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.