மாதவரம்: சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரணி சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கேபி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் இருசக்கர வாகன பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணி ஆர்டிஓ அலுவலகத்தில் தொடங்கி மாதவரம் மேம்பாலம் வழியாக மீண்டும் அலுவலகத்தை அடைந்தது.
இதைத்தொடர்ந்துமோட்டார் வாகன ஆய்வாளர் எஸ் ரமேஷ் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சாலை பாதுகாப்பு குறித்து விளக்கினார்