தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருஷாபிஷேக விழா

DIN



ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. மகா சாந்தி ஹோமத்துடன் துவங்கிய இந்த வருஷாபிஷேக விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்தம் மூன்று நாள்கள் நடைபெறுகிறது. 

முதல் நாளான வெள்ளிக்கிழமை மகா சாந்தி ஹோமமும், சனிக்கிழமை 108 கலச அபிஷேகமும், ஞாயிற்றுக்கிழமை ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

இந்த வருஷாபிஷேக விழா ஆண்டாள் கோவில் நுழைவாயிலில் யானை கால் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது

யானை கால் மண்டபத்தில் வைத்து நடைபெறும் வருஷாபிஷேக விழா

வருஷாபிஷேக விழா முன்னிட்டு ஆண்டாளுக்கும் ரெங்க மன்னருக்கும் பல்வேறு சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடைபெற உள்ளன.

இந்த மூன்று நாள்கள் பூஜையிலும் ஆண்டாள் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT