தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35.9 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35.9 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினா் சோதனை செய்தபோது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த அருண்பாண்டி என்பவர், தனது உடமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்த 8 லட்சம் ரூ. மதிப்பிலான 158 கிராம் தங்கம், புதுக்கோட்டையைச் சேர்ந்த துரைசாமி என்பவர் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 188 கிராம் தங்கம், பெரம்பலூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் கடத்தி வந்த ரூ. 8.12 லட்சம் மதிப்பிலான 168 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதே போல சார்ஜாவில் இருந்து வந்த திருச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடமிருந்து ரூ.9.41 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ. 35.9 லட்சம் மதிப்பிலான 690 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT