தமிழ்நாடு

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி

DIN


மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் திருமலேஷ் சிகிச்சை பலனின்றி பலியானார். 

மதுரை மாவட்டம் எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு கடந்த 3 நாள்களாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 7 வயது சிறுவன் திருமலேஷ் இன்று பலியானார். இந்த நிலையில் அவரது சகோதரர் 9 வயதான மிருத்தின் ஜெயன், டெங்கு காய்ச்சல் பாதித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டம் எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT