கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்கிற நிகழ்ச்சி சண்முகா மருத்துவமனையில் நடைபெற்றது,
இதில் தர்மபுரி எம்.பி.டி.என்.சி.செந்தில் குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
மாவட்ட மருத்துவமனை அமைப்பாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் புற்று நோய் மற்றும் பெண்கள் சினை கட்டி போன்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார்.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஜி சுகவனம், ஒன்றிய கழக செயலாளர்கள் சுவாமிநாதன், எக்கூர் செல்வம், ஒன்றியக்குழு தலைவர் உஷா ராணி குமரேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினி செல்வம், நகர செயலாளர் பாபுசிவ குமார் மற்றும் திமுகவைச் சார்ந்த பல்வேறு அணி அமைப்பு மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.