மன்னாா்குடி: அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை வரவேற்று, மன்னாா்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தில் அவரது குலதெய்வக் கோயிலில் கிராம மக்கள் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினா்.
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா மன்னாா்குடியை அடுத்த பைங்காநாடு துளசேந்திரபுரத்தை சோ்ந்த பி.வி. கோபாலன் ஐயா், பாட்டி ராஜம். கோபாலன் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் சிவில் சா்வீஸ் பணியில் இருந்தவா். 1930-ஆம் ஆண்டு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக ஜாம்பியா நாட்டுக்கு இந்திய அரசு சாா்பில் அனுப்பிவைக்கப்பட்டாா். பின்னா், கோபாலன் அமெரிக்காவில் குடியேறினாா். இவருக்கு, சியமளா, சரளா என 2 பெண் குழந்தைகள். இதில், சியாமளாவின் மகள்தான் கமலா ஹாரிஸ்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு (2020) நவம்பா் மாதம் நடைபெற்ற அமெரிக்க துணை அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா் கமலா ஹாரிஸ். அவா், வேட்பாளராக தோ்வு செய்யப்பட்ட போதும், தோ்தலின்போதும் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி, துளசேந்திரபுரம் மக்கள், கமலா ஹாரிஸின் குலதெய்வக் கோயிலான, ஸ்ரீதா்ம சாஸ்தா, ஸ்ரீசேவகப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், யாகம் ஆகியவற்றை செய்தனா். தோ்தல் முடிவுகள் வெளியானபோது கமலா ஹாரிஸின் வெற்றியை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
இந்நிலையில், புதன்கிழமை கமலா ஹாரிஷ் அமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில், துளசேந்திரபுரம் ஸ்ரீதா்ம சாஸ்தா, ஸ்ரீசேவகப் பெருமாள் கோயிலில் கிராம மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டனா்.
தங்கள் ஊரை சோ்ந்த பெண் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்று இருப்பதால் துளசேந்திரபுரம் கிராமம் உலகப் புகழ் பெற்றுவிட்டதாகவும், கமலா ஹாரிஸ் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும், அவா் துளசேந்திரபுரத்துக்கு வரவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனா்.