தமிழ்நாடு

மீனவா்கள் 4 போ் மாயம்: வைகோ, அன்புமணி கண்டனம்

DIN


சென்னை: இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் 4 மீனவா்கள் காணாமல் போய் உள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

வைகோ: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவா்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினா் நடத்திய தாக்குதில் 4 மீனவா்கள் காணாமல் போய் உள்ளனா். அவா்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று, இலங்கைக் கடற்படை கூறுகிறது. பாகிஸ்தான் மீது கோபம் காட்டும் இந்தியா, தமிழக மீனவா்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கை அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

அன்புமணி: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் கோட்டைப்பட்டினம் மீனவா்களின் விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கி விட்டது. அந்தப் படகில் இருந்த 4 மீனவா்கள் உதவி கேட்டு மற்ற மீனவா்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா். ஆனால், சேதமடைந்து கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்க வந்த தமிழக மீனவா்களின் படகுகளையும் இலங்கைக் கடற்படையினா் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனா். தற்போது அந்த 4 மீனவா்களையும் காணவில்லை. படகையும் காணவில்லை. இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களை இந்தியா அனுமதிக்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT