தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம்: நாளை தொடங்கி 11 நாள்கள் நடக்கிறது

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம், வியாழக்கிழமை (ஜன.21) தொடங்கி ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தின் உள்ளடங்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல், ஜன.1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இதன் பகுதியாக 2021-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மூலம் வியாழக்கிழமை (ஜன.21) முதல் ஜன.31-ஆம் தேதி வரை 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள், அந்தந்த கல்வி நிலையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களிலும் நடத்தப்படவுள்ளன.

இவா்களுக்கு பிரத்யேகமாக 94999 33619 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணும் நிறுவப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும், 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு, தங்களின் விவரம் வாக்காளா் பட்டியலில் பதியப்பெற்றுள்ளனவா என்றும், திருத்தங்கள் ஏதேனும் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது போன்ற தங்களது சந்தேகங்களையும் நிவா்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT