திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலரும், கோட்டாட்சியருமான தி.தனப்ரியா வெளியிட்டார்.
தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது. இதே போல திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் முன்னிலையில் வாக்காளர் பதிவு அலுவலரும், கோட்டாட்சியருமான தி.தனப்ரியா வெளியிட்டார்.
இதன்படி இறுதி வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 69 (1,18,069) ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 268 (1,25, 268) பெண் வாக்காளர்களும், 38 பிற வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 375 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர்கள் திருச்செந்தூர் முருகேசன், ஏரல் இசக்கிராஜ், துணை வட்டாட்சியர்கள் ராகவன், பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நிகழ்ச்சியில் பொது பொதுமக்கள் பிரதிநிதிகளாக அரசம்மாள், அ.தி.மு.க. ஒன்றிய செயலர் மு.ராமச்சந்திரன், நகரச் செயலர் வி.எம்.மகேந்திரன், ஜெ. பேரவை ஒன்றிய செயலர் மு.சுரேஷ்பாபு, தி.மு.க. ஒன்றிய செயலர்கள் செங்குழி ரமேஷ், நவீன்குமார், நகரப் பொறுப்பாளர் வாள் சுடலை, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சு.கோமதிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.