சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஸ்டாலினைக் கண்டித்து சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.ராஜா ஆர்.எம்.சின்னதம்பி அ.மருதமுத்து கு.சிதரா சி.மனோன்மணி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் ஒன்றிய செயலாளர்கள் சி.ரஞ்சித்குமார் வி.பி.சேகர் க.ராமசாமி வ.ராஜா மெடிக்கல் ராஜா கே.பி.முருகேசன் தா.மோகன் சந்திரசேகரன் தலைமைக்கழக பேச்சாளர் கோபிகாளிதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஆத்தூர் கெங்கவல்லி ஏற்காடு வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதி மகளிரணியினர் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.