சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 105.81 அடியாக உயர்ந்தது.
அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 1993கன அடியிலிருந்து 1680கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.57 டிஎம்சியாக இருந்தது.