தமிழ்நாடு

ஜனவரி 22-இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அறிவிப்பு வெளியீடு

DIN

சென்னை: ஜனவரி 22-இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் செவ்வாய் மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி 22-இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என்றும், அதில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ம் தேதி காலை 11 மணியளவில் திறக்கப்படவுள்ளது என்று அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது  .

சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையேற்று திறந்து வைக்க உள்ளார். 

முக்கியமாக சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் 27-ம் தேதி சிறையிலிருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்படும் தினத்தில் நினைவிடம் திறக்கப்படுவதும், அதற்கு முன்னதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT