கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
இன்று காலை ரப்பர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், திடீரென பயங்கர தீ விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி வருகிறார்கள்.