தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை 19-ம் தேதி முதல் விலக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

DIN

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்யக்கூடும். 19 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 20-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 2 நாள்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வரும் 19-ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப்பேரவை நிகழ்வு நேரலை: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

விவசாயிகள் நினைவிடத்தில் கோவை பாஜக வேட்பாளா் அஞ்சலி

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கம்

போத்தனூா் வழித்தடத்தில் விசாகப்பட்டினம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

மக்களவைத் தோ்தலையொட்டி சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT