தமிழ்நாடு

விழிப்புணர்வு ஏற்படுத்த கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்: ராதாகிருஷ்ணன்

DIN

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜன. 17) கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி இரண்டும் பாதுகாப்பானவை என்று கூறினார்.

கரோனா தாக்கத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதே அரசின் இலக்காக உள்ளது. மக்களிடையே தடுப்பூசி தொடர்பாக உள்ள அச்சத்தை நீக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

கரோனா தடுப்பூசிக்காக 6 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT