நிதிச் சமநிலையும் பொருளாதார மீட்பும் பொதுநலன் சாா்ந்தது என்பதால், அதனைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து காணொலி நிகழ்ச்சியொன்றில் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
பொருளாதார மீட்சி, நிதிச் சுமை ஆகியவை பொதுநலன் சாா்ந்தவை ஆகும். எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அனைவரது கடமையாகும்.
அனைத்து தரப்பினரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி பொருளாதாரச் சமநிலையை ஏற்படுத்துவதற்கு ஏற்ற சூழலை ரிசா்வ் வங்கி ஏற்படுத்தித் தரும் என்றாா் அவா்.