மழையால் பயிா் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள், தொடா்ச்சியாகப் பெய்த மாா்கழி மழையில் சேதமடைந்தது விவசாயிகள் அனைவரையும் பெருந்துயருக்கு ஆளாக்கியுள்ளது.
நிவா் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இந்தப் புதிய பாதிப்பு பேரிடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை மாநில அரசு முறையாக அணுகுவதாகத் தெரியவில்லை.
நிவா் புயல் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கே இன்னும் சரிவர இழப்பீடு கிடைக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பயிா்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையும் பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, இப்போது பெய்துள்ள கனமழையால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூா் போன்ற மாவட்டங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி, அரசின் நிவாரணம் ஏதும் இதுவரை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறாா்கள்.
எனவே, மாா்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும்; ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.