தமிழ்நாடு

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

DIN

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

உலகின் மிகப்பெரிதான கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை காலை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வின்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் தடுப்பூசி போடும் மொத்தம் உள்ள மூவாயிரத்து ஆறு மையங்களும் இணையவழியில் இணைக்கப்பட்டது. 

இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 8 மையங்களில் இந்த கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

முதற்கட்டமாக மருத்துவர், செவிலியர் உள்பட சுகாதார பணியாளர் 21,820 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் மட்டும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT